×

ஜன்னல் வழியே கையை விட்டு செயின் திருட்டு

தர்மபுரி, ஆக. 6: தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஅள்ளி கீழ்கொட்டாய் மேட்டைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி (25). வரதராஜன் வெல்டிங் வேலையும், விஜயலட்சுமி வெங்காயம் விற்பனையும் செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை கழற்றி மேஜையில் வைத்து விட்டு தூங்கினார். நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது மேஜை மீது வைத்திருந்த செயினை காணவில்லை. ஜன்னல் வழியாக கையைவிட்டு மர்ம நபர் செயினை திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி விஜயலட்சுமி தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜன்னல் வழியே கையை விட்டு செயின் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Varadarajan ,A.Kollalli Kilikottai Metta ,Vijayalakshmi ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...