×

சிறப்பு அந்தஸ்து நீக்கி 4வது ஆண்டு ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு வீட்டு சிறை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தானது கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படாதவகையில் பிடிபி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியை வீட்டு காவலில் போலீசார் வைத்தனர். இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக எந்த பக்தர்கள் குழுவும் நேற்று யாத்திரைக்கு புறப்படவில்லை.

The post சிறப்பு அந்தஸ்து நீக்கி 4வது ஆண்டு ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு வீட்டு சிறை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,chief minister ,Mehbooba ,Amarnath Yatra ,Srinagar ,Kashmir ,Union Government ,Meghbooba ,Amarnath ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...