×

வேதாரண்யம் பகுதியில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி அடிக்கடி தடைபட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடந்து வருகிறது. இரவு, பகலாக உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய், பனை மட்டைகளை கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

The post வேதாரண்யம் பகுதியில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vedaranagam ,Vedaranayam ,Nagai district ,Vetaranthaya ,Agastiyanalli ,Godiakadam ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...