×

டூவீலர் விபத்தில் மாணவன் பலி

 

ஆண்டிபட்டி ஆக. 5: ஆண்டிபட்டி அருகே ரோசனப்பட்டியை சேர்ந்தவர் குமார் மகன் ஹரிகுமார்(22). கூலித் தொழிலாளி. நேற்று காலை பதிவெண் இல்லாத தனது டூவீலரில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் சாமி மகன் ரமேஷ் பிரபு(16) , என்பவருடன் ஆண்டிபட்டி சென்றார். ஹரிகுமார் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

கட்டுப்பாடு இழந்த வாகனம் ரோட்டில் விழுந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவரான ரமேஷ் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஹரிகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் விபத்தில் மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Kumar Makan Harikumar ,Rosenapatti ,Andipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...