×

மதுவுக்கு அடிமையானவர் சாவு

 

ஈரோடு, ஆக.5: ஈரோடு, ரயில்வே காலனி பின்புறம் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (48). இவரது மனைவி அனுராதா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முருகானந்தம், கடந்த 2008ம் ஆண்டு கொடுமுடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த அவர், மதுவுக்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதனால், கடந்த 2019ம் ஆண்டு நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன்பின், பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த அவர், வேலைக்கு செல்லும் இடங்களிலேயே தங்கி கொள்வாராம். தவிர, மதுபோதையில், ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் விழுந்துகிடப்பாராம். மேலும், அவ்வப்போது மதுபோதையில் வீட்டுக்கு சென்று, மனைவியிடமும், அவரது தாயாரிடமும் தகராறு செய்து, செலவுக்கு பணமும் வாங்கி செல்வாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் ரயில்வே காலனி பகுதியில் அசைவின்றிக் கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே முருகானந்தம் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.இதுகுறித்து அனுராதா அளித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுவுக்கு அடிமையானவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Muruganandam ,Anna Nagar ,Railway Colony ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை