- தேனூர் ஊராட்சி
- நக்கசலேம் மின் வாரியம்
- பெரம்பலூர்
- Thenur
- மன்னாச்சனல் லூர் கிழக்குப் பிரிவு
- திருச்சி மாவட்டம்
- தின மலர்
பெரம்பலூர், ஆக.5: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல் லூர் கிழக்கு பிரிவு அலுவ லகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் தேனூர் கிராமம், பெரம்பலூர் மாவ ட்டம் நக்கசேலம் மின்சார வாரிய அலுவலகத்துடன் இணைக்கப்படுகிறது என் று பெரம்பலூர் மின்வாரிய கோ ட்ட செயற்பொறியாளர் (இயக்குதலும் பராமரித்த லும்) அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், ரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்குப்பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமம் மற்றும் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பு களும், மாவட்ட சீரமைப்பு பணிகள் காரணமாக, பெர ம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்காவில் உள்ள நக்கசேலம் மின்வாரிய அலுவலகத்துடன் இணைக்க வேண்டி உள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமத்தில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் மின் பாதைகள் அனைத் தும் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நக்கல் சேலம் பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளது.
எனவே தேனூர் கிராமம் மற்றும் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் பொது மக்களும் மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் நக்கசேலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தைத் தொ டர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என பெரம்பலூர் மின்வா ரிய கோட்ட செயற்பொறி யாளர் (இயக்குதலும் பரா மரித்தலும்) அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post தேனூர் கிராமம் நக்கசேலம் மின்வாரியத்துடன் சேர்ப்பு appeared first on Dinakaran.