×

கார் பார்க்கிங்கில் தவறவிட்ட 7 சவரன் உரியவரிடம் ஒப்படைப்பு: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (64). இவர் தனது குடும்பத்துடன் கடந்த 3ம் தேதி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தி.நகருக்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சென்றபோது, பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த 7 சவரன் நகைகள் தவறவிட்டுள்ளனர். இதை கவனித்த பெண் ஒருவர், அந்த பையை அருகில் உள்ள போக்குவரத்து உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர்கள் தியகராஜன், அழகுராஜா ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிறகு பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்த போது, மோதிரம், கல் வைத்த மோதிரம், டாலர் செயின், கல்வைத்த நெக்லஸ் என 7 சவரன் நகைகள் இருந்துள்ளது. உடனே காரின் பதிவு எண்ணை வைத்து போக்குவரத்து போலீசார் காரின் உரிமையாளர் செல்போன் எண்ணை எடுத்து அவருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தவறவிட்ட நகைகளின் அடையாளங்கள் மற்றும் நகைகள் குறித்து முறையாக விசாரணை நடத்தி, அவர்களிடம் 7 சவரன் நகைகளை ஒப்படைத்தனர்.

The post கார் பார்க்கிங்கில் தவறவிட்ட 7 சவரன் உரியவரிடம் ஒப்படைப்பு: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sawarans ,Chennai ,Kumaran ,Madipakkam ,Uriyavar ,Dinakaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...