×

கன மழை காரணமாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் தேங்கிய மழைநீர்; மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே பெய்த மழையால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவு வரை தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதே போன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.     …

The post கன மழை காரணமாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் தேங்கிய மழைநீர்; மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Iravatheeswarar temple ,Tarasuram ,Thanjavur ,Kumbakonam ,Thanjavur district ,Tarasuram Airavatheeswarar temple ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...