×

காஞ்சிபுரத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் (பாலூட்டும் தாய்மார்கள்) ஆகியோர் உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா பற்றிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : World Breastfeeding Week ,Kancheepuram ,Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,Integrated Child Development Work ,World Breastfeeding Week Awareness Rally in Kanchipuram ,Dinakaran ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...