×

கேரளாவில் போக்குவரத்து விதி மீறல் 19 எம்எல்ஏக்கள் 10 எம்பிக்களுக்கு அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் ஆண்டனி ராஜு கூறியது: கேரளாவில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் சாலை விபத்துக்கள் பெருமளவு குறைந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 19 எம்எல்ஏக்களும், 10 எம்பிக்களும் இதில் அடங்குவர். 328 அரசு வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத 2,21,251 பேர் இதுவரை சிக்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவில் போக்குவரத்து விதி மீறல் 19 எம்எல்ஏக்கள் 10 எம்பிக்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...