×

பைக் மீது குப்பை லாரி மோதி தாய் பரிதாப பலி

பூந்தமல்லி:ஆவடி அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வரலட்சுமி(46), இவரது மகள் குணாளினி(20), இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் நேற்று வேலைக்கு செல்வதற்காக மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர். குணாளினி மொபெட்டை ஓட்டினார். பின்னால் அவரது தாய் வரலட்சுமி அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி – மவுண்ட் சாலை, காட்டுப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற குப்பை லாரி மொபெட் மீது உரசியதில், மொபெட்டில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் வரலட்சுமி மீது குப்பை லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குணாளினி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வரலட்சுமி உடலை மீட்டு பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குணாளினி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஊராட்சி மன்ற குப்பை லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post பைக் மீது குப்பை லாரி மோதி தாய் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ravi ,Sekkadu ,Avadi ,Varalakshmi ,Kunalini ,Borur ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து