×

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் கலைஞர் உருவம்: தொழிலாளி அசத்தல்

கோவை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா(48) என்பவர் சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை நுணுக்கமாக வரைந்து அசத்தியுள்ளார். இதனை செய்வதற்கு சுமார் 3 மணி நேரமாகியதாக அவர் கூறினார். அவர் வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் ‘‘கலைஞர் 100’’ என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

The post நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் கலைஞர் உருவம்: தொழிலாளி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Shabbat ,Coimbatore ,Tamil Nadu ,Chief Minister ,Kuniyamuthur ,Asatal ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...