×

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளது. மக்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மீண்டும் அமளி தொடர்ந்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliamentarians ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...