×

திருவிழாவில் மோதல் வாலிபரை கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்கள் கைது

மானாமதுரை, ஆக.4: மானாமதுரை பர்மா காலனி முளைப்பாரி திருவிழாவில் வாலிபரை கத்தியால் குத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பர்மா காலனியில் கடந்த 1ம் தேதி முளைப்பாரி திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசாத்(21) என்ற வாலிபரை அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். காயமடைந்த பிரசாத் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் குமார் மகன் சசிக்குமார்(30), மகேந்திரன் மகன் மணிகண்டன்(26) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post திருவிழாவில் மோதல் வாலிபரை கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Manamadurai Parma Colony Mulaipari festival ,Manamadurai Municipality ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...