திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையாசிரியை ரேவதி தலைமை தலைமை தாங்கினார். ஆசிரியர் அருணன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபாலன் கல்வியாளர் ராஜசேகர், உதவி தலைமையாசிரியர் வினோலினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு 135 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் பிரசன்னா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி வாசன், விடுதி கமிட்டி உறுப்பினர் சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
The post 135 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.