×

பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க பாமக ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 69 கிலோ மீட்டரில் 237 தெருக்கள் உள்ளது.
இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டம் 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் கால அவகாசம் காரணமாக தாமதம் ஏற்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டு, ரூ.54.78 கோடி மதிப்பீட்டில் ஆறாண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

6 ஆண்டுகளாக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் தற்போது பெய்த மழையின் காரணமாக தெருக்கள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் வாகனத்தில் ஏற்றி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் உடைகளில் சகதிபட்டு சிரமத்துடன் பள்ளி செல்கின்றனர். எனவே, மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

The post பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க பாமக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Ponneri ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...