×

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்: பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த, குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.

புதிதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என பலர் கோரி்க்கை மனுவை அளித்தனர். அதேபோல், தெரு விளக்குகள் அமைக்க வேண்டியும் ஒரு சிலர் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில், உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : E-Consumer Grievance Redressal Day ,Thiruvallur ,Board ,Periyakuppam ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்