×

44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசாணை வெளியீடு: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதற்கிணங்க நடப்பாண்டில் 44 புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஏறக்குறைய நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்கள், புராதான கட்டிடங்கள் தவிர்த்து பிற கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான ராஜபாளையம், எட்டையபுரம், ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு, திருவண்ணாமலை, காட்பாடி புதுப்பேட்டை, பண்ருட்டி, குள்ளஞ்சாவடி ஆழ்வார்திருநகரி, குடவாசல், கழுகுமலை, சாத்தான்குளம், திருத்தணி, பெரும்புதூர், திருக்கழுகுன்றம், ஆரணி, குளித்தலை, கமுதி, அருப்புக்கோட்டை, செம்பனார்கோவில் டி.பழூர், அரகண்டநல்லூர், ஈத்திரப்பட்டி, சூதூர், கிணத்துக்கடவு, பூத்தூர், ஒரத்தநாடு, நாக்குடி, மயிலம், சுவாமிமலை, வேதாரண்யம், நீடாமங்கலம், நாகூர், சீர்காழி, புள்ளம்பாடி, உத்திரமேரூர், மல்லசமுத்திரம், சங்கராபுரம் மற்றும் வல்லம் ஆகிய 40 சார்பதிவாளர் அலுவலங்களின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

The post 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசாணை வெளியீடு: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,Minister for Commercial Taxes and Registration ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...