×

தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி எம்ஜிஆர் ஆவாரா? டிடிவி.தினகரன் கிண்டல்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு கொலை வழக்கில் முனுசாமி, செல்லூர் ராஜு சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் பேசினோமா அல்லது அந்த கொலையை செய்தது யாரு என்று மக்கள் சந்தேகப்படும் பழனிசாமி பற்றி பேசினோமா அல்லது ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது கட்சி எப்படி இருந்தது. அது போலவா தற்போது உள்ளது. தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் ஆகிவிடுவாரா? அதிமுக கட்சியை அபகரித்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி எம்ஜிஆர் ஆவாரா? டிடிவி.தினகரன் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,MGR ,DTV.Thinakaran ,Chennai ,Theeran Chinnamalai ,Guindy ,DTV ,Dinakaran ,
× RELATED எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ...