×

புல்லட் ரயில் பணியின் போது இரும்பு கர்டர் விழுந்து ஒருவர் பலி

வதோதரா: குஜராத் மாநிலம் அகமதாபத்- மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் துவங்கி உள்ளது. இதையொட்டி, குஜராத்,வதோதரா மாவட்டம், கர்ஜன் நகருக்கு அருகே கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று கம்போலா கிராமத்தில் பணியின் போது கிரேனுடன் ராட்சத இரும்பு கர்டர் விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இது பற்றி கேள்விப்பட்டதும், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல், கடந்த 1ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் சம்ருதி விரைவு நெடுஞ்சாலை திட்ட பணியின் போது கிரேனுடன் ராட்சத இரும்பு கர்டர் விழுந்து 20 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புல்லட் ரயில் பணியின் போது இரும்பு கர்டர் விழுந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Vadodara ,Ahmedabad ,Gujarat ,Mumbai ,Maharashtra ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி