×

ரூ.8.5 லட்சம் வழிப்பறி 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை டி.பி.கே. தெருவைச் சேர்ந்தவர் முகமது தமீம் (29). இவர் கம்ப்யூட்டர் டிசைனர் ஆவார். கொடுங்கையூரைச் சேர்ந்த உறவினரான சாதிக் (32) என்பவர் கடந்த 31ம் தேதி ரூ.8.50 லட்சம் பணத்தை தனியார் வங்கியில் உள்ள மெஷினில் டெபாசிட் செய்யும்படி முகமது தமீமிடம் கொடுத்துள்ளார். அவர் ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் இருந்து ரூ.8.5 லட்சம் பணத்தை பைக்கில் கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் கையில் கிழித்து விட்டு பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து முகமது தமீம் ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) கருக்கா வெங்கடேஷ் (35) மற்றும் கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரைச் சேர்ந்த கருணா (எ) கொசு கருணா (26) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராயபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று 2 பேரையும் கைது செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைத்தனர்.

The post ரூ.8.5 லட்சம் வழிப்பறி 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Vannarpett ,D.P.K. Mohammad Tamim ,Kodunkaiyur ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...