×

தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தண்டலம், ஆகாஷ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(24). இவரது நண்பர் சீனிவாசன்(24). நண்பர்களான இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்ததும் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து பைக்கிள் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இதில், பைக்கை சீனிவாசன் ஓடினார். பின்னால், மோகன சுந்தரம் அமர்ந்து இருந்தார். வண்டி குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகனசுந்தரம் நண்பன் கண்ணெதிரே பரிதாபமாக பலியானார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் இறந்த மோகனசுந்தரம் உடலை மீட்டனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kunrathur ,Mohanasundaram ,Akash Nagar Main Road ,Thandalam, Kunrathur ,Srinivasan ,
× RELATED தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி