×

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அம்மா உணவகம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையர் அமுதவல்லி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாணவர்களுக்கு தயார் செய்யப்படும் உணவுகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, முறையாக மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறதா, மாணவர்களுக்கு உணவு வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என கேட்டறிந்தனர். இதேபோல், அம்மா உணவகத்தில் தினமும் எவ்வளவு பேர் வந்து உணவு அருந்துகின்றனர், அவர்களுக்கு போதுமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, சுத்தமாக, தரமாக உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தாம்பரம் ஆணையர் அழகுமீனா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Restaurant ,Rasinar ,Arasinar ,Salayur ,Tambaram Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...