×

வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர். எனவே பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2723 7124 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

The post வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...