×

தென்காசி ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தென்காசி: தென்காசி ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . நாளை முதல் நவம்பர்16 வரை உரிய இடைவெளியில் 105 நாட்களுக்கு 60 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; தென்காசி மாவட்டம், ராமநதி பாசனம், வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கு 1433-ஆம் பசலி கார் சாகுபடி செய்வதற்கு 04.08.2023 முதல் 16.11.2023 வரை உரிய இடைவெளியுடன் 105 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ராமநதி அணையிலிருந்து நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tamil Nadu Dam ,Tamkasi Ramanadi Dam ,TENKASI ,Ramanadi Dam ,Tengkasi ,Tamil Nadu Govt ,South Kasi Ramanadi dam ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்