×

சென்னை அசோக் நகரில் ஆய்வு பணியின்போது அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆய்வு பணியின்போது அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வு பணியை முடித்து திரும்பும்போது சாலையில் நின்றிருந்த சி.ஆர்.சரஸ்வதி, முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த அமமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியை கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரில் இருந்து இறங்கிவந்து வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி; முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து என்னுடன் பேசுவார் என நினைத்துப்பார்க்கவே இல்லை என்று தெரிவித்தார்.

அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தபோது நான் அவருக்கு வணக்கம் வைத்த உடன், காரிலிருந்து இறங்கி வந்து பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், முதல்வரை வரவேற்கவே நான் வீட்டிலிருந்து வெளியே வந்தேன். முதலமைச்சர் அவர்களே இறங்கி வந்து மக்களிடம் பேசுவது ஆரோக்கியமான அரசியல். மக்களின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கும் முதல்வருக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

The post சென்னை அசோக் நகரில் ஆய்வு பணியின்போது அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Ashok Nagar, ,Chennai ,Amatam ,Administrator ,D.C. R.R. Saraswadi ,Chief Minister ,MC. G.K. stalin ,Chief Executive ,Ashok Nagar ,R.R. Saraswadi ,BSE. G.K. Stalin ,Ashok ,CM ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்