×

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகவில் மாணவரணி துணை அமைப்பு பொறுப்புக்கு விண்ணப்பம்: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

ஆவடி: ஆவடியில் உள்ள திமுக அலுவலகத்தில நேற்று மாலை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பு ஒன்றிய, நகர, பகுதி கழகம் மற்றும் பேரூர் கழக மாணவரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பு பொறுப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி அமைப்புக்கான ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகங்களுக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பொறுப்பில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஆவடி, திருமலைராஜபுரம் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று மாநில மாணவரணி செயலாளர் சிவிஎம்பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமையில், மாநில மாணவரணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு முன்னிலையில் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, மாணவரணி துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் 10ம் தேதி மதியத்துக்குள் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண்.பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், பா.நரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகவில் மாணவரணி துணை அமைப்பு பொறுப்புக்கு விண்ணப்பம்: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Central District DMK ,S.M. Nassar MLA ,Aavadi ,DMK ,Thiruvallur Central District DMK Pro-Union ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு