×

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

கோவை: இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 38 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அந்த வாலிபர் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக கணவரின் செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pongalur ,Palladam ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...