×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை, ஆக.3: கோவை போத்தனூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுந்தராபுரம் ஓம்சக்தி கோவில் அருகே சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பண்டாரமுத்து (24), செல்வகண்ணன் (19), சுந்தராபுரம் கணேசபுரத்தை சேர்ந்த அறிவழகன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Botanur ,Sundarapuram Omshakti Temple ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...