×

திருப்பரங்குன்றம் அருகே வாலிபரை தாக்கி நகை, பணம் பறித்த போலீஸ் உள்பட 10 பேர் கும்பல் ஒருவர் கைது

திருப்பரங்குன்றம், ஆக. 3: திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுசந்தை சேர்ந்தவர் அபிஷேக் (25). இவர் சம்பவத்தன்று விளாச்சேரி கண்மாய் கரை சிவன் கோயில் அருகில் சென்று கொண்டிருந்தார். அவரை திடீரென 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க செயின், ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அபிஷேக் திருநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ராகவன், சீமை ராஜா, சின்னமருது, ஆயுதப்படை போலீஸ் முகம்மது இளையாஸ் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து இதில் சின்ன மருது (20) என்பவரை கைது செய்தனர். மற்ற 9 பேரை தேடி வருகின்றனர்.

The post திருப்பரங்குன்றம் அருகே வாலிபரை தாக்கி நகை, பணம் பறித்த போலீஸ் உள்பட 10 பேர் கும்பல் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Abhishek ,Keezatheru Naduchand ,Vlacherry Kanmai Karai Shivan ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!