×

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடி, ஆக. 3: போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (65) விவசாயி. இவர் மனைவி ஜெயலட்சுமி.ஒரு மகன் உள்ளனர். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவி, மகன் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த ஞானசேகரன் ேநற்று தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விஷம் குடித்து விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Gnanasekaran ,Shankarapuram ,Jayalakshmi ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு