×

கயத்தாறு பேரூராட்சியில் ரூ.27.60 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்

கயத்தாறு, ஆக. 3: கயத்தாறு பேரூராட்சி சார்பில் 15வது திட்ட மானிய குழு மற்றும் நமக்கு நாமே திட்டம் மூலம் வென்னிமலை சாஸ்தா கோிலில் இருந்து கோட்டை பிள்ளையார் கோயில் தெரு வரை ரூ.27.60 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கயத்தாறு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வார்டு கவுன்சிலர்கள் கொம்பையா, அய்யாத்துரை, நயினார் பாண்டியன், ஆதிலட்சுமி அந்தோணி, தேவி கண்ணன், அரசு ஒப்பந்ததாரர் இஸ்மாயில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், வார்டு செயலாளர்கள் செல்லத்துரை, கேப்டன் கொம்பையா, ஜெனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கயத்தாறு பேரூராட்சியில் ரூ.27.60 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kayathar Municipal Corporation ,Kayathar ,Gayatharu Municipal Corporation ,Nadu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...