×

முறைகேடு புகார் ஓய்வுநாளில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை உதவி இயக்குநரான ஆனந்தன் ரூ.30 லட்சம் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல், வேலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலரான பாபு, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிடிஓவாக இருந்தபோது பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு செயலாளராக சேகரும், பிடிஓவாக பணியாற்றிய காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மூன்று அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 3 பேரும் கடந்த 31ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

The post முறைகேடு புகார் ஓய்வுநாளில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Anandan ,Ranipet district ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...