×

கமலுடன் அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்தவர் சாலையில் இறந்து கிடந்த துணை நடிகர்: வறுமையால் பிச்சை எடுத்த சோகம்

திருப்பரங்குன்றம்: சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் மோகன்(60). துணை நடிகர். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் அப்பு கமலின் குள்ள நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சரவணப்பொய்கை பகுதியில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை பகுதியில் ஒரு வயதானவர் சடலம் கிடப்பதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் சினிமா துணை நடிகர் மோகன் என்பதும், முதுமை காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மோகன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். மோகனுடைய உடல் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்த துணை நடிகர், வறுமை காரணமாக தெருவில் இறந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கமலுடன் அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்தவர் சாலையில் இறந்து கிடந்த துணை நடிகர்: வறுமையால் பிச்சை எடுத்த சோகம் appeared first on Dinakaran.

Tags : Kamal ,Apoorvabhashalar ,Tiruparangunram ,Mohan ,Mettur, Salem district ,Appu Kamal ,Apoorva ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...