×

குனோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிபுலி பலி

புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தில் குனோ தேசியப்பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிபுலி நேற்று இறந்தது. புராஜெக்ட் சீட்டா என்ற திட்டத்தின் கீழ் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர், இந்த ஆண்டு பிப்ரவரியில் 20 சிவிங்கி புலிகள் மத்தியப்பிரதேசம் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. மார்ச் தொடங்கி சிவிங்கி புலிகள் பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை மற்றொரு பெண் சிவிங்கி புலி உயிரிழந்துள்ளது. குனோ பூங்காவில் இருந்து தற்போது வரை 9 சிவிங்கி புலி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குனோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிபுலி பலி appeared first on Dinakaran.

Tags : Kuno Park ,New Delhi ,Kuno National Park ,Madhya Pradesh ,Project Cheetah ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...