×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் வடிதட்டு கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண்ணாலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு 15 அடி ஆழத்தில் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 15வது குழியில் அகழாய்வு நடந்து வருகிறது.

இதுவரை நடந்த அகழாய்வில் தங்க அணிகலன்கள், பகடைக்காய், தோசைக் கல், சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 3,150க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று முன்தினம் 15வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘15வது குழியில் நடந்த அகழாய்வில் பெரிய துளைகள் கொண்ட வடிதட்டு கிடைத்துள்ளது. இதன் மூலம் சங்கு வளையல்கள் உள்ளிட்ட வியாபார பொருட்களை பிரித்து வடிகட்ட பயன்படுத்திருக்கலாம்’ என்றார்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் வடிதட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakarisalkulkulam ,Vembakota ,Vijayakarisalkulkulkulkulam ,Virutunagar District, ,Vembakotta ,Visayakarisalkulkulam ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...