×

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே திருப்பதி சென்ற ரயில்மீது கல்லூரி மாணவர்கள் கல்வீச்சு: பெண் படுகாயம்

பெரம்பூர்: சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே திருப்பதிக்கு சென்ற ரயில்மீது கல்லூரி மாணவர்கள் கல்வீசியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று திருப்பதிக்கு ஒரு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் தாண்டி, வியாசர்பாடி ராமலிங்கா கோயில் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மின்சார ரயிலில் இருந்து கல்லூரி மாணவர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பதி ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து திருப்பதி நோக்கி கிளம்பி சென்றது. இச்சமயத்தில், அதே ரயிலில் கல்வீச்சில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தப்பி சென்றனர். எனினும், அந்த ரயிலில் இருந்த ஒரு பெண் பயணி கல்வீச்சு தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் தகவலறிந்ததும், திருப்பதி நோக்கி சென்ற ரயிலில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், அப்பெண் புகார் அளிக்க விரும்பாததால், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில்நிலைய தடங்களில் இருக்கும் சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதே ரயில் மார்க்கத்தில், ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பூர் மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதி ரயில் நிலையங்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

The post பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே திருப்பதி சென்ற ரயில்மீது கல்லூரி மாணவர்கள் கல்வீச்சு: பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Basinbridge railway station ,Perambur ,Chennai ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!