×

பொன்னாச்சி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை

பரமத்திவேலூர், ஆக.2: பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் உள்ள பொன்னாச்சி அம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியையொட்டி லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து 9 கலசங்களில் புனித நீரை வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு யாக வேள்வியும் அதனை தொடர்ந்து பொன்னாச்சி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கீரம்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோயிலில் தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். நன்செய் இடையார் மகா மாரியம்மன், அழகுநாச்சியம்மன், வேலூர் பேட்டை மாரியம்மன், புது மாரியம்மன், பகவதி அம்மன், பரமத்தி அழகு நாச்சியம்மன் அங்காளம்மன், கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

The post பொன்னாச்சி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை appeared first on Dinakaran.

Tags : Laksharchanai ,Ponnachi Amman Temple ,Paramathivelur ,Laksharchana ,Yaga ,Adi ,Potthanur ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை