×

பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியபோது பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் போலீஸ்காரர், வக்கீல் பரிதாப பலி: டிரைவர் கைது

திருவொற்றியூர்: மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கணபதி (36). இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் கணபதியின் சொந்த ஊரான மதுரையில் வசிக்கின்றனர். எண்ணூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற பணிகளை பார்க்கும் காவலாளியாக கணபதி பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதிவாணன் (32). இவரது மனைவி மருதாயி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. குழந்தை இல்லை.

நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் கணபதியும், மதிவாணனும் நள்ளிரவு 12.30 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். பைக்கை மதிவாணன் ஓட்டினார். கணபதியை அவரது குடியிருப்பில் இறக்கி விடுவதற்காக மதிவாணன் சென்றுள்ளார். சத்தியமூர்த்தி நகர் அருகே கால்வாயை கடந்து மணலி சாலையில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி மதிவாணன் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் ராஜியை (48), கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியபோது பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் போலீஸ்காரர், வக்கீல் பரிதாப பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Ganapathy ,Manali ,Premalatha ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...