சென்னை: ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக ஒன்றிய அரசை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை தணிக்கை செய்யக் கோரி கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பவித்ரா ஆஜரானார். பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களில் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளை கெடுக்கும் வகையில் உள்ளதால் தணிக்கை செய்வது அவசியம் என வலியுறுத்தினார். பின்னர் நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளது என குறிப்பிட்டு கூறாமல், பொதுப்படையாக உள்ளதாகவும், ஏற்கனவே அளித்த மனு பரீசீலிக்கபட்டுள்ள நிலையில், ஏதேனும் குறைகள் இருந்தால், மத்திய அரசின் சம்மந்தபட்ட சட்ட அமைப்பிடம் புகார் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
The post ஓடிடி தொடர்களுக்கு தணிக்கை கோரி வழக்கு: ஒன்றிய அரசை அணுகும்படி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

