×

கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரம்: சிறப்பு விசாரணை குழு பேச்சுக்கே இடம் இல்லை: முதல்வர் சித்தராமையா தகவல்

மங்களூரு: உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு உடுப்பி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு விசாரணை குழுவிற்கான அவசியமில்லை என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறுகையில்,’இந்த வழக்கை துணை கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதுதொடர்பாக எந்த கருத்தும் கூறமுடியாது. சிறப்பு விசாரணை குழு விசாரிப்பதற்கான அவசியம் இல்லை. இதுபோன்ற வழக்குகளில் மெத்தனம் காட்ட வேண்டாம் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’என்று தெரிவித்தார்.

The post கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரம்: சிறப்பு விசாரணை குழு பேச்சுக்கே இடம் இல்லை: முதல்வர் சித்தராமையா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Siddaramaiah ,Mangaluru ,Udupi ,Deputy Superintendent ,Udupi District Police ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...