×

பள்ளிபாளையம் அருகே 70 வயது மூதாட்டி பலாத்காரம்: 65 வயது முதியவர் கைது

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் குஞ்சாயம்மாள் (70). தனியாக வசித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் உதயசூரியன் (65). பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, குஞ்சாயம்மாள் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் நைசாக அவரது வீட்டிற்குள் நுழைந்த உதயசூரியன், குஞ்சாயம்மாளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென்று விட்டார்.

பின்னர், வெளியில் வந்த குஞ்சாயம்மாள் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மூதாட்டி குஞ்சாயம்மாள், சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

The post பள்ளிபாளையம் அருகே 70 வயது மூதாட்டி பலாத்காரம்: 65 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kunchayammal ,Kadachanallur ,Adhitravidar ,Pallipalayam, Namakkal district ,Dinakaran ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...