×

தானே பால பணி விபத்தில் கிருஷ்ணகிரி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி விஐபி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (35). விஎஸ்எல் என்ற கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் தானே பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட பாலம் கட்டுமான பணியின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு நேற்றிரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சந்தோஷிற்கு ரூபி என்ற மனைவியும், ஆத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

The post தானே பால பணி விபத்தில் கிருஷ்ணகிரி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Valibur ,Thane ,Palala ,Santhosh ,Krishnagiri ,VSL ,Krishnakiri Valiber ,Bal ,
× RELATED ரயிலில் பறித்த செல்போனை மீட்க முயன்ற...