×

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து அசாமை சேர்ந்தவர் படுகாயம்: காட்பாடியில் பரபரப்பு

வேலூர்:அசாம் மாநிலம் ஜோர்கட்டா, கொன்ச் தெர்மேஜி நாககேலியாவை சேர்ந்தவர் புதேவர் தத்தா(60). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க தின்சுக்கியா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்தார். நேற்று காலை 9 மணியளவில் ரயில் காட்பாடியில் நின்று புறப்பட்டது. அப்போது படியில் நின்று கொண்டிருந்த புதேவர் தத்தா தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கியவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்ட ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் ரயிலில் இருந்து விழுந்து அசாமை சேர்ந்தவர் படுகாயம்: காட்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Budhevar Dutta ,Konch Thermaji Nagakelia ,Jorgata ,Assam ,Bengaluru, Karnataka ,Katpadi ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...