×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் முதல்முறையாக இணைந்து போராட்டம்

தேனி: ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் முதல்முறையாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ். அணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவோம் என்று அறிவுப்பு தெரிவித்திருந்தார்.

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அறிவிப்பானது சில நாட்களில் அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆர்பாட்டத்திற்கு அ.ம.மு.க. சார்பில் ஆதரவு அளிப்போம் நானும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்பேன் என்று கூறிருந்தார். அதன் அடிப்படையில் இன்று ஓபிஎஸ் அணி சார்பாக தேனியில் இந்த ஆர்பாட்டமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்காக ஓபிஎஸ் கலந்துகொண்டுள்ளார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் முதல்முறையாக இணைந்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,O.D. Pannerselvam ,D. ,TD ,Dinakaran ,O. Pannerselvam ,Kondanadu ,O.A. Panneerselvam ,D. TD ,
× RELATED ஐ.ஐ.டி.யில் படித்த 8000 பேருக்கு வேலை கிடைக்கவில்லை