×

மனைவியை வெட்டிய கணவன் கைது

பேட்டை,ஆக.1: சுத்தமல்லி வஉசி தெருவை சேர்ந்தவர் வேலம்மாள் (54). இவரது கணவர் ஆறுமுகம் (64). கணவன், மனைவி கருத்துவேறுபாடு காரணமாக ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் நேற்று வீட்டில் இருந்த வேலம்மாளிடம் வீட்டு பத்திரத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வேலம்மாள் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மனைவியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினார். இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதிலிருந்த பொருட்களை எடுத்து தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மனைவியை வெட்டிய கணவன் ஆறுமுகத்தை கைது செய்தார்.

The post மனைவியை வெட்டிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Pettah ,Velammal ,Sudhamalli Vausi Street ,Arumugam ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை