திண்டுக்கல், ஆக. 1: திண்டுக்கல் ஏ.வெள்ளோடு கிராமத்தில் குடியிருக்கும் பாப்புராஜ் தாங்கள் செல்லும் பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து மீட்டு தர கோரி நேற்று கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஏ.வெள்ளோடு கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நாங்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறோம்.
நாங்கள் பயன்படுத்தி வரும் பத்தடி அகலமுள்ள பொது பாதையை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார். இதனால் நாங்கள் செல்வதற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் விசாரணை செய்து பொது பாதையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
The post ஏ.வெள்ளோவில் பொது பாதை ஆக்கிரமிப்பு புகார் appeared first on Dinakaran.