×

தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரிக்கை

சிவகங்கை, ஆக.1: மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் கிராமத்தில் அரசு நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கலெக்டர் ஆஷாஅஜீத்திடம் கிராமத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மானாமதுரை வட்டம், மாங்குளம் குரூப், பனிக்கனேந்தல் கிராமத்தில் மேய்ச்சல் நிலங்கள், புஞ்சை தரிசு நிலங்கள், கண்மாய்களுக்கான நீர்ப்பிடிப்பு நிலங்கள் ஏரளமானாவை உள்ளன. இதில் சுமார் 300 ஏக்கர் அரசு நிலங்கள் தனியார் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.இந்த பட்டாக்கள் அனைத்தும் இலவச நில ஒப்படை விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ளது.

மானாமதுரை நகராட்சியில் இருந்து 2 கி.மீல் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா பெற்றுள்ளவர்கள் போலியான தகவல்கள் தந்து மோசடியாக பட்டா பெற்றுள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த மோசடிகள் நடந்துள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லமுடியாத அவலநிலை தொடர்கிறது. எனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து மானாமதுரை பனிக்கனேந்தல் கிராமத்தில் போலியாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை உரிய ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Vidhikanananthal ,Manamadura ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்