×

மாணவர்களுக்கு பரிசு

காரைக்குடி, ஆக.1: காரைக்குடியில் ஓய்ஸ்மென்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ப விழா நடந்தது. முன்னாள் தலைவர் லட்சுமணன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் இளமதி தலைமை வகித்தார். புதிய தலைவராக தொழிலதிபர் ஸ்ரீலட்சுமி பிரிண்டர்ஸ் கேஎன்.சரணவன், செயலாளராக மூத்த வழக்கறிஞர் கமல்தயாளன், பொருளாளராக முருகப்பன் உள்பட பதவி ஏற்றுக்கொண்டனர். டிஎஸ்பி பி.சரவணன் பரிசுகளை வழங்கினார். முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் தேவதர்சனுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2வில் சிறந்த மார்க் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொழில்வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, விசாலம் சிட்பண்ட் லிமிடெட் இயக்குநர் தொழிலதிபர் அரு.உமாபதி, டாக்டர்கள் திருப்பதி, பல்மருத்துவர் டாக்டர் பிரபு, டாக்டர் ஆதவன், கிறிஸ்டோபர்ஞானராஜ், திரைப்பட தயாரிப்பாளர் முருகானந்தம், தேவகோட்டை ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முனைவர் ஜான்போஸ்கோ, சோமேஸ் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் செயலாளர் அடைக்கப்பன் நன்றி கூறினார்.

The post மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Oisemen's Club ,Former ,president ,Lakshmanan ,Dinakaran ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...