×

அழகர்கோயிலில் நாளை தீர்த்தவாரி உற்சவம்

 

மானாமதுரை, ஆக.1: மானாமதுரை கீழ்கரையில் உள்ள வீரஅழகர் கோயிலில் திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாளை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. மானாமதுரை கீழ்கரையில் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மதுரை அழகர்கோயிலை போல சித்திரை திருவிழா ஆடித்திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான ஆடிமாத பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வீரஅழகர், சவுந்திரவல்லி தாயார் உள்ளிட்டோருக்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சவுந்திரவல்லிதாயார் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு திருமாங்கல்ய நாண் சவுந்திரவல்லி தாயாருக்கும் உற்சவ விக்கிரகங்களுக்கும் அணிவிக்கப்பட்டது. மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்குப்பின் தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. மண்டகப்படிதாரர்கள். வீரஅழகர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், ஊர்முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் முக்கிய நிகழ்வான நாளை பத்தாம் நாள் திருவிழாவில் மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தின் அருகே உள்ள அலங்காரகுளத்தில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

The post அழகர்கோயிலில் நாளை தீர்த்தவாரி உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Theerthavari Utsavam ,Alaghar Koil ,Manamadurai ,Thirukalyana festival ,Veerazhagar temple ,Alaghar Temple ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...